விசா கட்டணங்களை அதிகரித்த அமெரிக்கா

Date:

H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B பதிவுக் கட்டணமும் 10 அமெரிக்க டொலர்களில் இருந்து 215 டொலர்களாக உயரும்.

பதிவுக் கட்டண உயர்வவான அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் L-1 விசா கட்டணம் 460 டொலரில் இருந்து ஆயிரத்து 385 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

EB-5 வகை விசா கட்டணமும் 3 ஆயிரத்து 675 டொலரில் இருந்து 11 ஆயிரத்து 160 டொலராகவும் உயர்த்தப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...