இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
பெப்ரவரி 2024 இறுதிக்குள் இந்த சேவை செயற்படும் என உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார்- இராமேஸ்வரம் படகு இணைப்பு தொடர்பாக, உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் முயற்சிகளை ஒப்புக்கொண்டதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா-இலங்கை கூட்டாண்மையின் மூலக்கல்லாக இணைப்பின் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்கும் பொருளாதார செழுமையை உந்துவதில் அதன் பங்கையும் அவர் வலியுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் தரைப்பாலம் திட்டத்தை இணைப்பு முயற்சிகளுக்கு மற்றொரு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார்.