விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம்: இலங்கை வியட்நாம் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கை வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.

கொழும்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பிலேயே இரு நாடுகளுக்கிடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வியட்நாம் நாட்டின் விவசாயத்துறை உட்பட கிராம அபிவிருத்தி அமைச்சர் மின்மொஹான் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த ஒப்பந்தத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு, விவசாய தொழில்நுட்பம் தொடர்பிலான ஆய்வுகள் மற்றும் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...