1 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிப்பு

Date:

கடந்த ஓராண்டில் 1 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உட்பட பல நிறுவனங்கள் நேற்று குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

துண்டிக்கப்பட்ட இணைப்புகளை உடனடியாக மீளப் பெற்றுத் தருமாறும், மின்சாரக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் முறைமையை நடைமுறைப்படுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் வலேபொட வலியுறுத்தியுள்ளார்.

மறு இணைப்புக் கட்டணத்தை வசூலிக்காமல் இணைப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், மறு இணைப்புக் கட்டணத்தை தவணை முறையிலும் வசூலிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...