75 மில்லியன் டொலர் செலவில் சவூதி நிறுவிய கால்-கை வலிப்பு மருத்துவமனை செயற்பாடுகளை மதிப்பீடு செய்ய வந்தது SFD

Date:

இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள்  நேற்று(27) அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) அபிவிருத்தி மதிப்பீட்டுப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவை தூதரகத்தில் வரவேற்றார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கால்-கை வலிப்பு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்கள் திட்டத்தின் செயற்படுத்தலுக்குப் பின்னரான மதிப்பீட்டை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு, வளர்ச்சிக்கான சவூதி நிதியம் 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கி உதவியது.

இத்திட்டம் டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டில் இல் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இம்மருத்துவமனையானது 242 படுக்கைகள் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் அமையப்பெற்றுள்ளது.

இது கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மூளையின் மின் ஆற்றலின் அதிகரிப்பால் ஏற்படும் வலிப்புக்கு சிகிச்சையளிப்பதற்கான சேவைகளை வழங்குகி வருகிறது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...