9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் இன்று

Date:

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(07) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் புதிய கொள்கை விளக்க உரையை காலை 10.30 க்கு நிகழ்த்தி கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...