9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் இன்று

Date:

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(07) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் புதிய கொள்கை விளக்க உரையை காலை 10.30 க்கு நிகழ்த்தி கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...