அனுரவின் இந்திய விஜயம்: ‘நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது’

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயத்திலிருந்து நாம் சேகரிக்கக்கூடியது என்னவென்றால், அவரது கட்சி நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது” என மரிக்கார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவர்கள் இந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறும்போது நாங்கள் அரசாங்கத்தில் இருப்போம்” என்றார்.

“எவ்வாறிருப்பினும், இந்திய விஜயம் ஒரு சாதகமான நடவடிக்கை என்று நாங்கள் உணர்கிறோம். முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும், ”என மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...