இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தல்: முக்கிய மூவரிடையே போட்டி; வெற்றியை நோக்கி பிரபோவோ

Date:

உலகின் 3ஆவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் இன்று (14) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சரான பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2ஆவது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு அமைச்சர் பிரபோலோ 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவை பெற்றவர். துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...