ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) இன்று (19) இலங்கை தீவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.
2023 ஆகஸ்டில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின், தெஹ்ரான் விஜயத்தின் போது ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹ