ஐக்கிய அரபு அமீரக எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்பதற்கு இலங்கை வணிகங்களுக்கு அழைப்பு!

Date:

Sri Lanka RAK -2024’ கண்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 16-20 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ராசல் கைமா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் (RAK CCI) இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச தரத்திலான இலங்கை பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் இலங்கை நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் எக்ஸ்போ சென்டரில் கண்காட்சிக்காக காட்சிக்கூடங்களை அமைக்க அனுமதிக்கப்படும்.

விநியோகம் மற்றும் முதலீடுகள் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு மொத்தம் 240 காட்சிக்கூடங்கள் வழங்கப்படவுள்ளன.

ஐந்து நாள் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் இலங்கை வணிக நிறுவனங்கள் 2024 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இக்கண்காட்சியில் கலந்துகொள்ளும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த இலங்கையர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்களுக்கான சலுகைக் கட்டணங்கள் வழங்கப்பட உள்ளன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...