குப்பி விளக்கு சர்ச்சை: மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Date:

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்தவின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில்,ஊடகப் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு, தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தேவை ஏற்பட்டால் குப்பி விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என நோயல் பிரியந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...