கெஹலியவுக்கு சிஐடி ஆஜராகுமாறும் உத்தரவு: வெளிநாடு செல்லவும் தடை

Date:

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.

ரம்புக்வெல்ல நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவிருந்தார்.

எனினும், மற்றுமொரு வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருந்தமையால் அவர் ஆஜராகத் தவறியிருந்தார்.

இதனால் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வேறு திகதி கோரியுள்ளதாக கோரியிருந்தார்.

இந்நிலையிலேயே கொழும்பு, மாளிகாந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 10 சிவில் சமூக ஆர்வலர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்தது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...