ஜனநாயக அடக்குமுறை; சிவில் அமைப்புகள் விலகல்: ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம்!

Date:

சிவில் சமூககத்தை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதமொன்றையும் இந்த அமைப்புகள் அனுப்பியுள்ளன.

இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தினை (NAP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புகள் (CSOs) சிவில் கூட்டு முயற்சிகளிலிருந்து விலகுவதற்கு ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.

இது அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறிப்பாக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை (online safety bill) நிறைவேற்றுவது மற்றும் பரவலான எதிர்ப்பையும் மீறி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சிவில் சமூக வெளியை அடக்குவதற்கும் பொது மக்களின் அடிப்படை சுதந்திர மீறலுக்கும் எதிராக இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு எம்மை நிர்ப்பந்தித்துள்ளதாக இந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்த முடிவானது குழுவாக தீர்க்கமான முறையில் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆபத்தான முன்னெடுப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் சிவில் சமூக அமைப்புகளின் இணைப்பாளர்கள் என்ற வகையில், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (Transparency International -TISL) மற்றும் சர்வோதய ஷ்ரமதான இயக்கம் (Sarvodaya Shramadana Movement) இந்த கூட்டு முடிவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளாதாக தெரிவித்துள்ளன.

இந்த அமைப்புகள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் பின்வருமாறு,

திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) என்பது அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், பொது பிரச்சினைகளில் பொது மக்களின் பங்களிப்பை உறுதி செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல பங்குதாரர்களின் முயற்சியாகும்.

தற்போது, 70 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பெருகி வரும் உள்ளூர் அரசாங்கங்கள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புக்கள் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) உறுப்பினர்களாக உள்ளன.

திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) கீழ், சிவில் சமூகத்துடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் நல்லாட்சிக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கு, பங்குபெறும் அனைத்து நாடுகளும் பல பங்குதாரர்கள் செயல்முறையின் மூலம் இரண்டு ஆண்டு தேசிய செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

இலங்கை 2015 முதல் திறந்த அரசாங்க பங்குடைமையில் (OGP) அங்கத்துவம் பெறுவதன் மூலம் சர்வதேச ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அதன் பின்னர், இரண்டு தேசிய செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன, ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...