ஜனாதிபதி பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்துடன் நிறைவடையும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Date:

இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இந்த வருடம் தேசிய தேர்தல்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையும். அதனை தொடர்ந்து மனுத்தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...