ஜனாதிபதி பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்துடன் நிறைவடையும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Date:

இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இந்த வருடம் தேசிய தேர்தல்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையும். அதனை தொடர்ந்து மனுத்தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...