நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் வாரத்தில் கையளிக்கப்படும்

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய என்பன அறிவித்துள்ளன.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் சில சரத்துகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கு மாறாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அதனை நிறைவேற்றுவதற்கு அனுமதித்ததாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்தன.

குறித்த செயற்பாடு அரசியலமைப்பை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...