நாஸ் கலாச்சார நிலையத்தில் நபிகளாரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி நாளை முதல்

Date:

நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் எடுத்துரைக்கும் வகையிலான கண்காட்சியொன்றினை நாஸ் கலாச்சார நிலையமும் தாருல் குர்ஆன் லி பராஇமுல் ஈமானும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்காட்சியில் நபியவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை, நபியவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்னரான வாழ்க்கை, மக்காக் காலம், மதீனாக்காலம், நபியவர்களின் குடும்ப வாழ்வும் முகாமைத்துவமும், நபியவர்களின் ஆளுமைமிக்க வாழ்வியல் கலைகளும் தத்துவங்களும் எனும் தலைப்புக்களில் கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை (மார்ச் 01) பி.ப.2.30 க்கு அதிதிகளின் பிரசன்னத்துடன் உத்தியோகபூர்வமாக வெல்லம்பிட்டி நாஸ் கலாச்சார நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தக் கண்காட்சி பொது மக்கள் பார்வைக்காக 2,3,4 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குர்ஆன் மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முஸ்லிமல்லாத பல சகோதரர்களும் இந்தக் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளனர்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...