நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை!

Date:

நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாணின் நிகர எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், பாண் ஒன்றின் நிகர எடையை விட 13.5 கிராம் வித்தியாசம் காணப்படலாம் என குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரைவாசி பாணின் நிகர எடை 225 கிராம் எனவும், அதில் 9 கிராம் வித்தியாசம் காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...