புத்தளம் மன்ப உஸ் சாலிஹாத்தின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு!

Date:

புத்தளம் மன்ப உஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் தலைமையில் நேற்று (பெப்,04) நடைபெற்றது.

கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் (கபூரி ) கலந்து கொண்டார்.

கிராஅத்தை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில்,

76 ஆவது சுதந்திர தினம் கொண்டாப்படுகின்ற நிலையில் சுதந்திர தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கவேண்டும் அதற்கான காரணங்களும் நியாயங்களும் என்ன என்பது பற்றிய ஒரு விளக்கத்தை பல்வேறு கோணங்களில் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையிலும் முஸ்லிம் என்ற வகையிலும் எமது தாய்நாட்டுக்கு நாங்கள் ஆற்றவேண்டிய முக்கியமான பணிகள் என்னவென்பதையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இறுதியில் முதல்வர் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் நன்றி உரையுடன் மறைந்த இஸ்லாஹிய்யா அதிபர் அஷ்ஷைக்,முனீர் உட்பட கல்லூரிக்காக பங்களிப்புச் செய்த பிரமுகர்களுக்காகவும் துஆ செய்வதுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...