மாணவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம்: கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பம்!

Date:

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து மாணவர்கள் மீது வீழ்ந்த சம்பவம் தொடர்பில், கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 5 வயது சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

இந்த அனர்த்தத்தில் மேலும் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் குழுவொன்று பாடசாலை வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள காணியில் இருந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...