யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள்?: பேராயர் கேள்வி

Date:

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள் என்று தலைவர்களிடம் கேட்கிறேன்.

ஆட்சியாளர்களின் சுதந்திரத்தையா? அல்லது மக்களின் சுதந்திரத்தையா? வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வருகின்றனர்.

பிரபுக்கள் முன்னிலையில் பட்டினியல் இருக்கும் மக்களை அவமானப்படுத்துவது சுதந்திரமா?அழகான எமது தாய் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டம்.

அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்த நாட்டை மீட்க வேண்டும்.சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...