விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம்: இலங்கை வியட்நாம் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கை வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.

கொழும்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பிலேயே இரு நாடுகளுக்கிடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வியட்நாம் நாட்டின் விவசாயத்துறை உட்பட கிராம அபிவிருத்தி அமைச்சர் மின்மொஹான் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த ஒப்பந்தத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு, விவசாய தொழில்நுட்பம் தொடர்பிலான ஆய்வுகள் மற்றும் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...