இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுக்க புதிய நடவடிக்கை!

Date:

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்,  பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 109 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், பாதிக்கப்படும் நபர்கள் எந்நேரமும் பொலிஸாரைத் தொடர்புகொண்டு உதவிகோர முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...