இஸ்ரேல் – ஹிஸ்புல்லாஹ் சண்டை தீவிரம்: 3.3 இலட்சம் இஸ்ரேலியர்கள் இடப்பெயர்வு

Date:

இஸ்ரேல் – ஹெஸ்புலா சண்டை தீவிரம் – 3.3 இலட்சம் இஸ்ரேலியர்கள் இடப்பெயர்வு
27 மார்ச் 2024

மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ்– இஸ்ரேல் இராணுவம் இடையேயான சண்டை தீவிரம் அடைந்துள்ளது.

ஹமாஸுக்கு துணை நிற்கும் விதமாக இரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாஹ், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தொடுத்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் வசித்த சுமார் 3,30,000 இஸ்ரேலியர்கள் தங்கள் வீடுகளை விட்டு  இடம்பெயர்ந்துள்ளனர். தீவிரமான சண்டை லெபனான் எல்லையின் இருபுறமும் உள்ள நகரங்களை காலி செய்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலியர் ஒருவர் கூறுகையில்,

20 வருடங்கள் அமைதியாக இருந்தது. நிச்சயமற்ற நிலையும் இருந்தது. எதிரிகள் இடையே என்ன நடக்கிறது. அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள்? என தெரியவில்லை. இந்த சமயத்தில் அவர்கள் வளர்ந்துவிட்டனர். அமைதியாக வாழ பழகிவிட்டோம். ஆனால் தற்போது அவர்களை இங்கிருந்து தூரமாக தள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

கிர்யத் ஷ்மோனா குடியிருப்புவாசிகளை போலவே எங்களிடம் வலுவான ராணுவம் உள்ளது. செல்வதற்கு ஒரு இடமும் இல்லை. நான் எங்கே போவேன்? இங்குதான் எனக்கு வேலை இருக்கிறது. எல்லாமே அருகில் இருக்கிறது. நான் என் வீட்டில் இருக்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்  கூறினார்.
மூலம்: BBC

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...