சஜித், சொந்தக் கட்சி உறுப்பினர்களையே புறக்கணிக்கிறார்: குளியாப்பிட்டியில் ஜனாதிபதி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணித்து, வெளியாட்களுக்கு செவிசாய்த்து வருகிறார்.

இதன் காரணமாகவே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்குபற்ற போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சஜித் பிரேமதாச உண்மையில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்ற தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்கவும் ஓரங்கட்டவும் ஆரம்பித்துவிட்டார் என ஜனாதிபதி   தெரிவித்தார்.

“டாக்டர். டி சில்வா, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறு என்னிடம் கோரினார். அதன்படி IMF மற்றும்  பிரதிநிதிகளை சந்திப்பதில் எங்களுடன் இணைந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தேன்.

எவ்வாறாயினும், அந்தக் கூட்டங்களில் பங்கேற்க தமது கட்சி விரும்பவில்லை என சஜித்  பிரேமதாச என்னிடம் தெரிவித்தார். எனது கோரிக்கையை புறக்கணிக்குமாறு பிரேமதாசாவை ஊக்குவித்தவர் ஜி.எல்.பீரிஸ்.

பிரேமதாச உண்மையில் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்.  எனவே கடந்த காலங்களில் என்னை எதிர்த்தவர்களை எம்முடன் இணையுமாறு அழைக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...