சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் முன்மொழி!

Date:

ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரத்தை பெற விரும்புவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மனித பண்பாடுகளின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசா விடயத்தில் மேற்கொள்கின்ற மோசமான தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

‘பாலஸ்தீன அரசுக்கு ஸ்பெயினின் அங்கீகாரத்தை வழங்க நான் முன்மொழிகிறேன்,’ நான் இதை தார்மீக நம்பிக்கையுடன் செய்கிறேன், ஒரு நியாயமான காரணத்திற்காகவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக வாழ ஒரே வழி இதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...