சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் முன்மொழி!

Date:

ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரத்தை பெற விரும்புவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மனித பண்பாடுகளின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசா விடயத்தில் மேற்கொள்கின்ற மோசமான தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

‘பாலஸ்தீன அரசுக்கு ஸ்பெயினின் அங்கீகாரத்தை வழங்க நான் முன்மொழிகிறேன்,’ நான் இதை தார்மீக நம்பிக்கையுடன் செய்கிறேன், ஒரு நியாயமான காரணத்திற்காகவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக வாழ ஒரே வழி இதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...