நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு: மக்களுக்கு தவறான மருந்துகளும் விநியோகம்

Date:

நாடளாவிய ரீதியில் பரவலாக காணப்படும் 40, 000க்கும் அதிகமான போலி வைத்தியர்களை கண்டுபிடிக்க சோதனைகள் மேற்கொள்ள, அவர்களுக்கான அபராதத் தொகை மற்றும் சிறை தண்டனை வழங்குவதற்காக 12 பேருடன் கூடிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வைத்திய நிலையத்திலிருந்தும் அனுமதி வழங்கப்படும் சான்றிதழின்றி போலி வைத்தியர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.

இவர்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் தவறான மருந்துகளை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

மேலும், வைத்தியர்களின் பற்றுச்சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கும் மருந்தகங்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...