பாகிஸ்தானின் தேசிய தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டது!

Date:

பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு இன்று 23 மார்ச்2024 கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியகுடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான்சமூகத்தினர் கணிசமானோர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட்14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின்நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று பாகிஸ்தானின்தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்- அஸீஸ் அவர்கள் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது பாகிஸ்தான் தேசிய கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாகிஸ்தானின் தேசிய தினத்தைகுறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் கருத்துத்தெரிவிக்கையில், பாகிஸ்தானின் கொள்கைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதோடு தமது தாய்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் மட்டுமல்லாமல், இரு நட்பு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை மேலும் நெருக்கமாககொண்டு வருவதிலும் பாகிஸ்தான் சமூகம் தங்கள் பங்கை திறம்பட ஆற்றுமாறும்  குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஆழமான நட்பையும் உயர்ஸ்தானிகர் இதன் போது நினைவு கூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு நட்பு நாடுகளும் இருநாடுகளினதும் நலனுக்காக இந்த உறவினை  மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...