மந்த போசணையை ஒழிப்பதே தமது இலக்கு: ஜனாதிபதி

Date:

மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலும் 100ற்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளிலும் உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த தொகை போதுமானதல்லவென அந்த சங்கங்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...