TikTok செயலியை தடை செய்யும் முக்கிய பிரேரணையை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 352 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், சுமார் ஆறு மாதங்களுக்குள் TikTok செயலி விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் அமெரிக்காவில் குறித்த செயலி தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை இரு கட்சிகளின் வாக்கெடுப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டாலும், அதனை சட்டமாக மாற்றுவதற்கு செனட் சபை அனுமதி வழங்கிய பின்னர், ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம் கேமன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டு, ஐரோப்பா, அமெரிக்கா முழுவதும் அதன் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
இந்த பிரேரணை இரு கட்சிகளின் வாக்கெடுப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டாலும், அதனை சட்டமாக மாற்றுவதற்கு செனட் சபை அனுமதி வழங்கிய பின்னர், ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும்.
TikTok இன் தலைமை நிர்வாகியான Zhou Si Chu, நிறுவனம் தனது தரவை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஆயிரக்கணக்கான அமெரிக்க வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.