இன்றும் நாளையும் 25 ரயில் பயணங்கள் ரத்து..!

Date:

இன்றும் (30) நாளையும் (31) கரையோர ரயில் வீதியில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான குடிநீர் குழாயில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு திருத்தப் பணி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று கரையோர ரயில் வீதியில் 25 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் ரயில் சேவை மீளமைக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இணையவழி முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பணியை முறையாக மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் கலந்துரையாடலின் போது தமது தொழிற்சங்கத்தின் முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் என அதன் தலைவர்  சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...