உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்: மெதகம தம்மானந்த தேரர்!

Date:

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக தமது பீடத்தினருடன் விரிவாக ஆராய்ந்த பின்னரே தமது கருத்துக்களை வெளியிட முடியுமென அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தினால் கடந்த மாதம் உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதிகள் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து அவ்விரு பீடங்களும் இணைந்து அச்சட்டமூலத்தை ஆராய்ந்து, தமது நிலைப்பாடுகளை அறியத்தருவதாக மல்வத்துபீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியபீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோர் உறுதியளித்தனர்.

அதனடிப்படையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அஸ்கிரிய மகாவிகாரை சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இந்த உத்தேச சட்டமூலமானது நல்லிணக்கப்பொறிமுறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...