காசா மக்களுக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும்:சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Date:

காசாவில் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தென்னாபிரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகப்பெரிய அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் மோதல் பகுதிகளில் வறுமை அதிகரித்து வருவதாகவும், இதனால் சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் ஆகியோர் வெகுவாக பதிப்படைந்துள்ளதாகவும் நீதிபதிகள் விபரித்துள்ளனர்.

இந்தநிலையில் மனித அவலத்தை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் என ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதலானது காசாவின் அல் ஷிபா வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இடம்பெறுவதாக சர்வதேச நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

 

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...