குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன!

Date:

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கடந்த 22ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) நேற்று அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் அவர் இன்று (25) வாக்குமூலம் வழங்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேனவை மேற்கோள்காட்டி பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

அத்துடன், அவரை கைது செய்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“இதுவரை காலம் உண்மை வெளிகொணரப்படாமைக்கான காரணம் என்ன”? என்று கேள்வி எழுப்பட்ட நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே இந்த தகவலை அறிவித்ததாக மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...