சஜித், சொந்தக் கட்சி உறுப்பினர்களையே புறக்கணிக்கிறார்: குளியாப்பிட்டியில் ஜனாதிபதி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணித்து, வெளியாட்களுக்கு செவிசாய்த்து வருகிறார்.

இதன் காரணமாகவே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்குபற்ற போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சஜித் பிரேமதாச உண்மையில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்ற தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்கவும் ஓரங்கட்டவும் ஆரம்பித்துவிட்டார் என ஜனாதிபதி   தெரிவித்தார்.

“டாக்டர். டி சில்வா, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறு என்னிடம் கோரினார். அதன்படி IMF மற்றும்  பிரதிநிதிகளை சந்திப்பதில் எங்களுடன் இணைந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தேன்.

எவ்வாறாயினும், அந்தக் கூட்டங்களில் பங்கேற்க தமது கட்சி விரும்பவில்லை என சஜித்  பிரேமதாச என்னிடம் தெரிவித்தார். எனது கோரிக்கையை புறக்கணிக்குமாறு பிரேமதாசாவை ஊக்குவித்தவர் ஜி.எல்.பீரிஸ்.

பிரேமதாச உண்மையில் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்.  எனவே கடந்த காலங்களில் என்னை எதிர்த்தவர்களை எம்முடன் இணையுமாறு அழைக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...