சவூதி அரேபியா இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியது!

Date:

சவூதி அரேபியாவின் மன்னரின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் 50 தொன் பேரிச்சம்பழங்களைக் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில் சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கை அதிகாரிகளிடம்  பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் இவை வழங்கப்பட்டன .

சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமீர் அஜ்வாத் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பல அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...