சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இயற்கையை கண்டுகளிக்க புதிய திட்டம் !

Date:

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சில பழைய ரோமானிய ரயில் பெட்டிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த ரயில் பெட்டிகள் பார்வையாளர் கூடங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதனூடாக, ரயில் பயணத்தின்போது, இயற்கையை கண்டுகளிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனரமைப்புப் பணிகளுக்காக ரயில்வே திணைக்களம் 55 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது.

இரத்மலானையிலுள்ள பிரதான ரயில் இயந்திர தொழிற்சாலையின் ஊடாக, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்த ரோமானிய ரயில் பெட்டிகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி, பதுளைக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த ரயில் பெட்டிகளை சேவையில் இணைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...