தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படுகிறது!

Date:

பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம், மீண்டும் இன்று (13) முதல் திறக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் கீழுள்ள கோள் மண்டலத்தின் புரொஜெக்டர் (Projector) உபகரணங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோள் மண்டலம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று (12) வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த புரொஜெக்டர்கள் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (13) புதன்கிழமை முதல் கோள் மண்டலத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் அவசியமான நடவடிக்கைகளை இலங்கை கோள் மண்டல ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

காட்சிகள்
பாடசாலை மாணவர்களுக்கு:
செவ்வாய் – வெள்ளி: மு.ப.10:00 – பி.ப. 2.00 மணி

பொதுமக்களுக்கு
சனிக்கிழமை : மு.ப.10:00 – பி.ப. 2.00 மணி

பாடசாலை மாணவர்களுக்கான முன்பதிவுக்கு: 011 2586 499

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...