தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்: மார்ச் 12 இயக்கத்தின் இன்றைய விழிப்புணர்வு செயற்றிட்டம்

Date:

“தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்” என்னும் நோக்கில் தேர்தலுக்காக மக்களை தயார்ப்படுத்துவதைக் இலக்காகக்கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு இன்று விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர், இளையோர், பெண்கள் அமைப்பினர் இணைந்து தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.

இத்துண்டு பிரசுரத்தில் பாரளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளுராட்சிசபைத் தேர்தல் காலங்களில் நல்ல தலைவர்களை உருவாக்கி தெரிவுசெய்யும் பணியில் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கருத்தில் கொள்ள வேண்டிய 08 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பிரபல பேச்சாளர்களின் முக்கிய உரைகள்,
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி, என்பனவும் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
மார்ச் 12 இயக்கம் – தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கோடு 2015ஆம் ஆண்டு சிவில் சமூக அமைப்புக்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...