தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் ஆதரவு: கருத்து கணிப்பில் தொடர்ந்தும் முன்னிலை

Date:

தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் விருப்பு தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரக் கொள்கைகளுக்கான நிறுவனம் (IHP) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கருத்துக்கணிப்பு நடவடிக்கையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதம் பாரியளவு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படாமலே தொடர்கின்றது.

இதன்படி, 53 வீத அங்கீகாரத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.

தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 34 வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 6 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 7 வீதமும் மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16,248 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் தரவுகளை பயன்படுத்தி இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...