தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் ஆதரவு: கருத்து கணிப்பில் தொடர்ந்தும் முன்னிலை

Date:

தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் விருப்பு தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரக் கொள்கைகளுக்கான நிறுவனம் (IHP) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கருத்துக்கணிப்பு நடவடிக்கையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதம் பாரியளவு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படாமலே தொடர்கின்றது.

இதன்படி, 53 வீத அங்கீகாரத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.

தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 34 வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 6 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 7 வீதமும் மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16,248 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் தரவுகளை பயன்படுத்தி இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...