புதிய கல்வியாண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகம்!

Date:

அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தின் ஏற்பாட்டில் மார்ச் 3 ஆம் திகதியன்று தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கஹட்டோவிட்ட கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துட் சமத் அவர்கள் கலந்துகொண்டதோடு விசேட பேச்சாளராக சமூக வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எஸ்.எம். பாஹிக் அவர்களும் கலந்துகொண்டு சிறைப்புரையாற்றினார்கள்.

இவ்வைபவத்தில் சிறப்பு அதிதிகளாக கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மீர் அவர்களும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம். சர்ஜுன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2023 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அல்பத்திரியா மகா வித்தியாலயம், முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்களுக்கும் இவ்வைபவத்தின் போது விசேட உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஷாபி  நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் அவர்கள் இந்நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...