மந்த போசணையை ஒழிப்பதே தமது இலக்கு: ஜனாதிபதி

Date:

மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலும் 100ற்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளிலும் உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த தொகை போதுமானதல்லவென அந்த சங்கங்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...