ஹிஜ்ரி 1445 “ரமழான்” மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு: எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை!

Date:

ஹிஜ்ரி 1445 ரமழான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 ஷஃபான் 29ஆம் நாளாகிய 2024 மார்ச் 11 திங்கட்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

இம்மாநாடு இன்ஷா அல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுத் தலைவர் அல் கலீபத் அல் ஷாதுலீ மௌலவி எம்.பி.எம். ஹிஷாம் (அல் பத்தாஹி) அவர்களின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறை குழு மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சகல தரப்பினரதும் இறுதித் தீர்மானம் இன்ஷா அல்லாஹ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக உடனடியாக உத்தியோகபூர்வமாக மாநாட்டு தலைவரினால் அறிவிக்கப்படும்.

தலைபிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்கள் தயவுடன் வேண்டப்படுகின்றனர்.

பிறை சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு 011 2432110, 011 2451245, 0777 353 789 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்புகொள்ளலாம்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...