250 கோடி செலவில் ராகம வைத்தியசாலையில் நிறுவப்பட்ட எம்.எச் உமர் ஈரல் பராமரிப்பு நிலையம்!

Date:

இலங்கையில் சிறியவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கிடையில் அதிகரித்து வரும் நாட்பட்ட ஈரல் நோய் காரணமாக ஈரல் மாற்றுச் சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கென ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் ஈரல் பராமரிப்பு நிலையமொன்று நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தினை ப்ரான்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் எம் எச் ஒமர் மன்றம் 250 கோடி ரூபா செலவில் நிர்மாணித்திருந்தது.

நிலையத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்துக்கு ப்ரான்டிக்ஸின் பங்களிப்பைப் பாராட்டியதோடு குறித்த நிலையத்தை நிறுவியமைக்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

நிகழ்வில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ப்ரானெ்டிக்ஸின் பணிப்பாளர்களுள் ஒருவரான எம். எச். உமர் அவர்களின் பேரர் ஹஸீப் உமர் உட்பட வைத்தியசாலையினதும் பல்கலைக்கழகத்தினதும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...