இலங்கையிலிருந்த கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழப்பு: அதிக தடுப்பூசி செலுத்தியமையே காரணம்!

Date:

இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஆண் வரிக்குதிரை நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளது.

இந்த ஆண் வரிக்குதிரை 06 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த நாட்டிற்கு பெறப்பட்டது.

ரிதியகம பூங்காவில் இருந்து இனப்பெருக்கத்திற்காக இந்த வரிக்குதிரையை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்குகளை கொண்டு வரும்போது அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இந்த வரிக்குதிரைக்கும் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதாலேயே உயிரிழந்திருக்க கூடும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையில் மிகவும் அரிதாக வாழும் உயிரினங்களில் வரிக்குதிரையும் ஒன்றும். வரிக்குதிரையின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க கடந்த காலத்தில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில்தான் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வரிக்குதிரைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழந்துள்ளதால் எதிர்காலத்தில் வரிக்குதிரை இனம் இலங்கையில் அழிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...