காசா மக்களுக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும்:சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Date:

காசாவில் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தென்னாபிரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகப்பெரிய அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் மோதல் பகுதிகளில் வறுமை அதிகரித்து வருவதாகவும், இதனால் சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் ஆகியோர் வெகுவாக பதிப்படைந்துள்ளதாகவும் நீதிபதிகள் விபரித்துள்ளனர்.

இந்தநிலையில் மனித அவலத்தை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் என ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதலானது காசாவின் அல் ஷிபா வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இடம்பெறுவதாக சர்வதேச நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...