‘சுவையான உணவுகள் எங்கள் மேசைகளில் இல்லை’: புனித ரமழானைக் அனுஷ்டிக்க காசா மக்கள் படும் அன்றாடப் போராட்டம்..!

Date:

புனித நோன்பு மாதமான ரமழான் மாதத்தில் காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு, நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும்,  உயிர்வாழ்வதற்கும் அன்றாடப் போராட்டமாக மாறியுள்ளது.

ரமழானுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான அனைத்து சர்வதேச முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து பலஸ்தீனியர்களிடையே ஏமாற்றத்தின் மனநிலைக்கு மத்தியில் மார்ச் 11 அன்று, போரினால் அழிக்கப்பட்ட காசா இஸ்லாமிய புனித மாதத்திற்குள் நுழைந்தது.

இஸ்ரேலிய எல்லை நகரங்கள் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொன்று 200க்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாகக் கைப்பற்றியதை அடுத்து, அக்டோபர் 7 முதல் காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான போரைத் தொடங்கியது.

ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்த போரில் இதுவரை 32,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காசா பகுதியில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில், 55 வயதான பலஸ்தீனியர் நிடல் அபு பராக்கா,  தனது குடும்பத்துடன் தனது வீட்டின் இடிபாடுகளில் தனது தினசரி நோன்பை திறக்கிறார்.

“இத்தனை சோகங்களால், அனைத்தையும் நாங்கள் இழந்துவிட்டோம். எங்களின் பெரும்பாலான சுவையான உணவுகள் மற்றும் இனிப்புகள்  எங்கள் மேஜைகளில் இடம் பெறவில்லை,” என்று அபு பராக்கா  கூறினார்.

மேலும், வீடுகள் இனி ரம்ழான் விளக்குகள் மற்றும் அழகான விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதில்லை, “எங்கள் உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் வருகைகளைப் பரிமாறிக்கொள்ள எங்களுக்கு நேரம் இல்லை,

“மக்கள் அனைவரும் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச உணவைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக உள்ளனர், காசா மக்களுக்கு இது எளிதானது அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

“எந்த நேரத்திலும் நாங்கள் வெளியேற அச்சுறுத்தப்படுகிறோம், வரும் நாட்களில் அல்லது மணிநேரங்களில் கூட எங்களுக்கு என்ன நடக்கும் என்று எங்களால் கணிக்க முடியாது,” என்று அவர்  கவலை தெரிவிக்கிறார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...