ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கிறார் ரணில்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை இன்று குளியாப்பிட்டியவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளார்.

“சபேவா” (யதார்த்தம்) எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வு குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் இன்று. பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சி சார்பற்ற வேட்பாளராக முன்வந்துள்ள ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு பல்வேறு அரசியல் அமைப்புகளினதும் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய

தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கியப்பட்ட ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சியில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கட்சி சார்பற்ற முயற்சிக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்கால பொது பேரணிகளுக்கான திட்டங்களை காரியவசம் அறிவித்தார்.

இன்றைய பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார, மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க. ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...