தேசிய ரீதியாக நடத்தப்பட்ட கைத்தொழில், விவசாயம் தொடர்பான ஆக்கம் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸாவுக்கு பதக்கங்கள்!

Date:

கைத்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறந்த முயற்சியாளர் கழகங்களுக்கிடையிலான கைத்தொழில்,விவசாயம் தொடர்பான ஆக்கம் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலையின் மாணவிகள் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வெற்றி கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வின் சித்திர போட்டிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 4 மாணவிகள் பங்கேற்றதுடன் அந்த 4 சித்திரங்களும் இன்றைய நிகழ்வில் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

பல பாடசாலைகளுக்கு மத்தியில் வட மேல் மாகாணத்தில் இருந்து தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மொழி மூலமான பாடசாலை என்ற பெருமையையும் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலை பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்விற்கு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபரான எஸ். எப். சாஜினாஸ் மற்றும் நஸ்ரின் ஆசிரியை சகிதம் இப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...